பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு எடப்பாடி அரசில் தான் சாவுகள் அதிகம் - திருமுருகன் காந்தி பொளேர் - வீடியோ
சேலம்: டெங்கு மரணம் என்பது அரசின் செயலற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தான் சாவுகள் அதிகம் என திருமுருகன் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது: ''டெங்கு மரணம் என்பது அரசின் செயலற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. இந்த நோய் எப்படி பரவும் என்பதற்கான நீண்ட கால ஆய்வுகள் உள்ளன.

இம்மாதிரியான நோய்கள் பரவும் என்று தெரிந்தும் கூட அரசு அதை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு தொடர்ச்சியாக சுகாதாரத்தில் தோல்வி அடைந்து வருகிறது. டெங்கு மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியிலேயே நிறைய டெங்கு மரணங்கள் நடந்துகொண்டு இருக்கிறது. இப்படியான இக்காட்டான சூழ்நிலையில் எந்த அக்கறையும், பொறுப்புணர்வும் அற்ற ஒருவர் முதல்வராக உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரும் இதனுடன் உடன்பட்டு நிற்கிறார்.
மக்கள் இங்கு கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டுள்ளார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு பொதுமக்கள் அதிகம் இறப்பது இப்போதுதான் நடைபெறுகிறது. காலனியாதிக்க அரசு செய்ததைத்தான் எடப்பாடி பழனிச்சாமி அரசும் செய்து வருகிறது. அதை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்''. - இவ்வாறு அவர் கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications