கமிஷனர் பதவியேற்புக்கு அழைக்கப்படாத பத்திரிகையாளர்கள்!
சென்னை: சென்னை மாநகர போலீஸ் ஆணையராக டி.கே.ராஜேந்திரன் மீண்டும் பதவியேற்றுள்ளார். ஆனால் அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை, அனுமதிக்கவும் படவில்லை.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு ராஜேந்திரன்தான் கமிஷனராக இருந்து வந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சரமாரிப் புகார்களைத் தொடர்ந்து அவரை தேர்தல் ஆணையம் இடம் மாற்றியது. அசுதோஷ் சுக்லா புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தேர்தல் முடிந்து அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் இடம் மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக மீண்டும் டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து சென்னையின் 103வது கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் ராஜேந்திரன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. வழக்கமாக பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு கமிஷனர் பதவியை ஏற்பவர்கள் பேட்டியும் தருவார்கள். ஆனால் நேற்று இந்த சடங்குகள் நடைபெறவில்லை.
பாரம்பரியம் மிக்க சென்னை போலீஸ் கமிஷனர் பதவியை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், சென்னை மக்களுக்காக பாடுபடுவேன் என்றும், அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் டி.கே.ராஜேந்திரன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications