புரோக்கர் சுகேஷின் கூட்டாளி சென்னையில் கைது... இறுகும் இரட்டை இலை லஞ்ச வழக்கு!
இரட்டை இலை லஞ்ச விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளியாக ஹவாலா ஏஜென்ட் ஜெய் விக்ரம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளியை டெல்லி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். ஹவாலா ஏஜென்ட்டான ஜெய் விக்ரமை போலீசார் கைது செய்து டெல்லி அழைத்து சென்றுள்ளனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் இடைத்தரகர் சுகேஷ் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு பணம் தர முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. சுமார் 60 கோடி வரை பேரம் பேசப்பட்டு முன்பணம் அளிக்கப்பட்டதாகவும் அந்தத் தொகையுடன் தெற்கு டெல்லி பகுதியில் இடைத்தரகர் சுகேஷை கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிக்கையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது.
இந்த வழக்கில் நாளைக்குள் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் ஜெய் விக்ரம் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சுகேஷின் கூட்டாளி இந்த ஜெய் என்று சொல்லப்படுகிறது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications