தமிழக அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தாராம் ஸ்டாலின்.. பீதி கிளப்பிய ஆங்கில ஊடகங்கள்
சென்னை: சட்டசபையில் கூவத்தூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்வியை தவறாக புரிந்து கொண்ட ஆங்கில ஊடகங்கள், அவர் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக பிரேக்கிங் நியூஸ் போட்டதால் பரபரப்பு நிலவியது.
சசிகலா தரப்பு குதிரைபேரம் பேசி கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைத்திருந்ததாக ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஸ்டிங் ஆபரேசன் மூலம் தகவல் வெளியிட்டது.
அதிமுக எம்.எல்.ஏ சரவணன் இதுகுறித்த தகவலை வெளியிட்டதாக கூறி, அந்த சேனல் செய்தி ஒளிபரப்பியிருந்தது. இதை சரவணன் மறுத்திருந்தார்.

ஆர்வக் கோளாறு
இந்த சம்பவத்திற்கு பிறகு, தேசிய ஊடகங்கள் கவனம், தமிழக அரசியலுக்கு திரும்பியுள்ளது. இன்று அதில் ஒருபடி மேலேபோய், ஆர்வம், ஆர்வக்கோளாறாக மாறிவிட்டது.

வெளிநடப்பு
சட்டசபையில் இன்று, ஸ்டாலின் பேசுகையில், கூவத்தூர் குதிரைபேரம் குறித்த குற்றச்சாட்டு பற்றி சபாநாயகரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை படித்துக்காட்டுமாறு வேண்டுகோள்விடுத்தார். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
|
சபாநாயகரிடம் விளக்கம்
இதுகுறித்து செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்ட டிவிட் ஒன்றில், "திமுகவின் ஸ்டாலின் கூவத்தூர் விவகாரம் குறித்து கிளப்பியுள்ளார், தமிழக சட்டசபை நம்பிக்கை தீர்மானம் குறித்து ஆளுநர் சபாநாயகரிடம் விளக்கம் கேட்டுள்ளார்" என ஆங்கிலத்தில் கூறப்பட்டிருந்தது.

தவறான செய்தி
இதை தவறாக புரிந்துகொண்ட ஆங்கில தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்கள், ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளார் என பிரேக்கிங் செய்திகளை அடித்துவிட ஆரம்பித்தன. இதனால் தமிழ் நிருபர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஒன்றுக்கு இருமுறை அவர்கள் சட்டசபை நிகழ்வுகளை சரிபார்த்துக்கொண்டனர்.

போட்டியால் விபரீதம்
தமிழ் நிருபர்கள் தங்கள் ஆங்கில ஊடக நண்பர்களுக்கு தவறை திருத்துமாறு, தகவல் கொடுத்த பிறகு, ஆங்கில ஊடகங்கள் நடந்ததை உணர்ந்து செய்தி கோணத்தை மாற்றிக்கொண்டு, வெளிநடப்பு என்பதை தெரிவித்தன. செய்தியை முந்திதர வேண்டும் என்பதால் சரியாக விசாரித்து பார்க்காமல் டெல்லியிலும், மும்பையிலும் தலைமையிடத்தை கொண்ட ஆங்கில ஊடகங்கள் பிரேக்கிங் போட்டுள்ளன.
-
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்!












Click it and Unblock the Notifications