For Daily Alerts
Just In
நான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை... பதறியடித்து மறுத்த மயிலை எம்எல்ஏ நடராஜ்
நான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என மயிலை எம்எல்ஏ நடராஜ் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: தான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நடராஜ் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான நடராஜ் சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் தானும ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் எம்எல்ஏ நடராஜ் இதனை மறுத்துள்ளார். தான் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக அதிமுக எம்எல்ஏ நடராஜ் நேற்று ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
English summary
Mylapore ADMK MLA Nataraj refuses the matter that he is supporting Edappadi palanisamy. He said that he wants everyone should be united.
Story first published: Wednesday, February 15, 2017, 14:24 [IST]