மோடி -ராஜபக்சே சந்திப்பு... இலங்கை முயற்சிக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் முயற்சி என்கிறார் தமிழி
சென்னை: அமெரிக்காவில் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்தது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு இலங்கை அதிபர் ராஜ்பக்சே உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக் குறித்து பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

இலங்கைப் பிரச்சினை...
இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் பிரதமர் மோடி தீவிரமாகவுள்ளார். தேர்தலுக்கு முன்பிருந்தே இது குறித்து அவர் பேசி வருகிறார்.
13வது சட்ட திருத்தம்...
தனது பதவியேற்பு விழாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் 13வது சட்ட திருத்தத்தை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இலங்கையிலிருந்து டெல்லி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
அமெரிக்க சந்திப்பு...
இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மோடி, அங்கு ராஜபக்சேவை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு காணும் முயற்சியாகும்.
நிரந்தர தீர்வு...
இதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால் நாம் பேசினால் தான் முடியும்.
பாஜகவின் உறுதி...
தமிழகத்தின் மற்ற கட்சிகளை விட இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏறபட வேண்டுமென்பதில் பாஜக உறுதியாகவுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications