ஹவாலா பாணியில் ஆர்கே நகரில் பணம் விநியோகம்... தினகரன் மீது பாஜக வேட்பாளர் பகீர் புகார்
ஹவாலா பாணியில் ஆர்கே நகருக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் மீது பாஜக வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஹவாலா பாணியில் ஆர்கே நகருக்கு பணம் விநியோகம் செய்துள்ளதாக டிடிவி தினகரன் மீது பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் பகீர் புகார் அளித்துள்ளார்.
ஆர்கே நகருக்கு கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகாரினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் தேதி மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் இந்த தொகுதிக்குள்பட்ட வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் ரூ. 2000 நோட்டுகளை ரூ.6000 வரை தருவதாக திமுக, பாஜக புகார் தெரிவித்தன. மேலும் குக்கர் சின்னம் பெற்ற தினகரனும் வீடு வீடாக குக்கர்களை விநியோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

மீண்டும் ரத்தாகும்
ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் வருமான வரித் துறையினர் ரெய்டும் நடத்தினர். இத்தகைய பணப்புகார்களை அடுத்து தேர்தல் மீண்டும் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வாக்கு பதிவு தொடங்கியது
ஆனால் ஆர்கே நகருக்கு இன்று இடைதேர்தல் தொடங்கி வாக்கு பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளர் கரு நாகராஜன், டிடிவி தினகரன் மீது பகீர் புகாரை தெரிவித்துள்ளார்.

கடத்தல் பொருள்
அவர் கூறுகையில் பொதுவாக ஹவாலா கடத்தல்காரர்கள் ரூபாய் நோட்டை இரண்டாக கிழித்து பாதியை ஓரிடத்திலும் மீதி பாதியை ஒருவரும் வைத்துக் கொள்வர். சம்பந்தப்பட்ட நபர் பாதி நோட்டை மற்றொரு நபரிடம் காண்பிக்கும் போது கடத்தல் பொருள்கள், பணம் கைமாற்றப்படும்.

ரூ. 20 நோட்டு
அதுபோல் ஹவாலா மோசடி வழக்கில் தினகரன் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து அதில் அவர் சிக்கியுள்ளார். அந்த பழக்கத்தினாலோ என்னவோ ஹவாலா பாணியில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று இரவு முதல் ஆர்கே நகரில் உள்ள வாக்காளர்களுக்கு ரூ.20 நோட்டை கொடுத்துள்ளனர் தினகரன் அணியினர்.

ரூ.6000 லஞ்சம்
அவர்கள் கூறும் ஒரு போன் நம்பருக்கு ரூ.20-இல் உள்ள சீரியல் எண்ணை (வரிசை எண்) குறிப்பிட்டால் போதும் அந்த வாக்காளருக்கு ஒரு வோட்டுக்கு ரூ. 6000 லஞ்சமாக வழங்கப்படுகிறது என்று பகீர் புகாரை தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications