மதுரையில் மேலும் இரு தீவிரவாதிகள் கைது.. என்.ஐ.ஏ வேட்டை தொடருகிறது
மதுரையில் மேலும் இரு தீவிரவாதிகளை இன்று கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள்.
மதுரை: மைசூர் கோர்ட் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு ஏஜென்சி மேலும், இருவரை மதுரையில் கைது செய்துள்ளது.
மைசூரில் சில மாதங்கள் முன்பு கோர்ட் வளாகத்தின் வெளியே குண்டு வெடித்தது. அதை ஆய்வு செய்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளுக்கு, ஏற்கனவே ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும், கேரளாவின் கொல்லம் நகர நீதிமன்றங்கள் அருகே நடந்த குண்டு வெடிப்புக்கும் இதற்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது.

அவ்விரு நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளின்போது, ஒசாமா பின் லேடன் படத்துடன் கூடிய, நோட்டீஸ் சிக்கியது. மைசூரில் அப்படி எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் தொடர்புகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக, மதுரையில் நேற்று 3 தீவிரவாதிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இன்று, சம்சுதீன் மற்றும் முகமது ஆயுப் ஆகிய மேலும் இரு தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் அல்-உம்மா தீவிரவாதிகள் என்றும், தற்போது அடிப்படை இயக்கம் என பெயரை மாற்றிக்கொண்டு, அல்கொய்தாவின் கிளை போல செயல்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள், மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு பெங்களூர் அழைத்துவரப்படுகிறார்கள். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications