தவளை... ஓநாய்... மீன்... பச்சோந்தி.. நிர்வாண உடம்பில் வரைந்த ஓவியர்- வைரல் வீடியோ
சென்னை: 5 பெண்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தவளை... 3 பெண்களின் உடலில் வரையப்பட்ட ஓநாய், ஒற்றை பெண்ணலான மீன், 2 பெண்களை கொண்டு உருவாக்கப்பட்ட பச்சோந்தி என நிர்வாண உடல் ஓவியங்கள் வைரலாகி வருகின்றன.
இந்த ஓவியங்களை முதலில் பார்ப்பவர்கள் யாரும் நிஜ தவளை, ஓநாய் என்று தான் நினைப்பார்கள். கூர்ந்து கவனித்தாலும் அப்படியேதான் தோற்றம் தருகிறது. ஆனால் அந்த ஓவியம் நகரத்தொடங்கிய பின்னர்தான் இது நிர்வாண உடலில் வரையப்பட்ட ஓவியம் என்பது தெரியவருகிறது.
பெயின்டர் ஜோகன்ஸ் ஸ்டோடர்ஸ் நிர்வாணப் பெண்களுக்கு வர்ணம் தீட்டி அடித்து நரி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ''அனிமல் ஆர்ட் ஒர்க்கை'' இதற்காக ஜோகன்ஸ் பயன்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு இந்த ஓவியம் பிரமிப்பை அளிக்கிறது.
பார்ப்பவர்களுக்கு, ஓநாய் ஊளையிடுவது போன்ற தோற்றம்தான் அளிக்கும். அந்த மிருகங்களின் கண்களை உற்று நோக்கினாலும் பெண்கள்தான் அந்த மிருகங்களின் தோற்றத்தில் உள்ளனர் என்பது அறிவது கடினம்
ஓநாய்
ஒரு பெண்ணைக் கொண்டு ஓநாயின் கால், தொண்டை, தலையாகவும், இரண்டாவது பெண்ணைக் கொண்டு வால் மற்றும் பின் பக்க உடலையும் அமைத்து, மூன்றாவது பெண்ணைக் கொண்டு வயிறு என்று ஓநாயின் உருவத்தைக் கொண்டு வந்துள்ளார்.
மீன், பச்சோந்தி
ஒரே பெண் மூலம் மீன் போன்ற தோற்றத்தை தந்துள்ளார் ஓவியர். இரண்டு பெண்களைக் கொண்டு பச்சோந்தி போன்ற தோற்றத்தைக் கொடுத்துள்ளார்.
ஓவியரின் உழைப்பு
இந்த ஓவியத்தில் மிருகங்களின் உருவத்தைக் கொண்டுவர பல நாட்கள் ஜோகன்ஸ் உழைத்துள்ளார். இறுதியில் தேவைக்கு ஏற்ப 5, 3 நிர்வாணப் பெண்களைக் கொண்டு இந்த ஓவியத்தை முடிக்க 8 மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார்.
எப்படி சாத்தியம்
ஒரு கபேயில் இந்த பெண்களை சந்தித்தேன். இவர்களில் ஒருவர் மாடல். அவர்களிடம் என்னுடைய விருப்பத்தைக் கூறினேன். அவர்களும் ஒப்புக் கொண்டு என்னுடைய ஸ்டூடியோவுக்கு வந்தனர் என்று கூறியுள்ளார் ஓவியர் ஜோகன்ஸ். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.