For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

86% பணம் செல்லாது என்று எந்த கோமாளியும் சொல்லமாட்டான் - நாராயணசாமி சுளீர்

86 சதவிகித பணம் செல்லாது என்று எந்த கோமாளியும் திடீரென சொல்லமாட்டான் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: பெரிய நிறுவன முதலாளிகளுக்கு சலுகை செய்வதற்காக பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பட்டதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக சாடினார்.

Narayanaswamy blasts Modi

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏழைகள் தொழிலாளர்கள், விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர். ரூ.2000 புதிய நோட்டை மாற்ற முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க வரிசையில் காத்திருந்து 159 பேர் உயிரிழந்தனர்.

86% பணம் செல்லாது என்று எந்த கோமாளியும் திடீரென சொல்லமாட்டான் என்று அவர் தெரிவித்தார். பெரிய நிறுவன முதலாளிகளுக்கு சலுகை செய்வதற்காக பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நாரணயசாமி குற்றம் சாட்டினார்.

English summary
Puducherry CM Narayanaswamy has blasted PM Narendra Modi for his failed demonetization.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X