ஈபிஎஸ் அணி எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துகிறது.. அவமானப்படுத்துகிறது.. செம்மலை குமுறல்
ஈபிஎஸ் அணி எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துகிறார்கள் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள செம்மலை எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஈபிஎஸ் அணியினர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று ஓபிஎஸ் டீம் செம்மலை கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் செம்மலை கூறியதாவது: அதிமுக அம்மா அணியினர் எங்களை தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்துகிறார்கள்.
இரு அணிகள் இணைப்பு என்பது சவாலாகவே இருந்தது. இந்த நிலைமையை உருவாக்கியவர்கள் அந்த அணியினர்.

வேடிக்கை பார்க்கிறோம்
எதிர் அணியில் இருப்பவர்கள் தனித்தனியாக பேட்டிக் கொடுத்துக் கொண்டு முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணியில் நடந்து கொண்டிருக்கின்ற குழப்பங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

உறுதியான நிலைப்பாடு
ஓபிஎஸ், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை எங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.

சகோதரமனப்பான்மை இல்லை
நாங்கள் இணைய இருக்கின்றோம். சகோதர மனப்பான்மையோடு இருக்கின்றோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை.

புறக்கணிப்பு
ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் வெளியில் ஒன்று சொல்வதும், செயல்படுத்துவது வேறாகவும் இருக்கிறது.
-
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications