மங்கிப் போன மவுசு... காற்றாடும் ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங்... கலக்கத்தில் ஆசிரியர் பள்ளிகள்!
நெல்லை: ஆசிரியர் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், எதிர்பார்த்தபடி மாணவர்கள் அதிகளவில் அதில் பங்கேற்காததால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கலக்கத்தில் உள்ளன.
மாநில கல்வியில் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 2016-17 கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு தொடங்கியது. வரும் 9ம்தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது.
முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது. ஆன்லைன் முறையில் இந்த கலந்தாய்வு நடந்தது.

தமிழகம் முழுவதும் சுமார் 676 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்பட பல ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன.
மாநிலம் முழுவதும் இந்த கல்வி ஆண்டில் 9 ஆயிரம் காலி இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் சேர சுமார் 3 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்ட அளவில் விண்ணப்பித்தவர்களுக்கு சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நேர்முக தேர்வு நடந்தது. இதில் இரண்டு மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
முனைஞ்சிபட்டி அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதல்வர் கோடா முன்னிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. தமிழக அளவில் முதல் நடந்த சிறப்பு பிரிவு கலந்தாய்வில் ஓருவர் கூட பங்குபெறவில்லை. முன்னாள் ராணுவ வீரர் பிரிவில் யாரும் சேரவிலலை. இதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகள் பிரிவில் யாரும் விண்ணப்பிக்கவில்லை.
மற்ற பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் பலரும் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கலக்கததில் உள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications