என்னது கண்டக்டர் இல்லா பேருந்து சேவையா? அப்போ யாரு டிக்கெட் கொடுப்பா?
தமிழக அரசு பேருந்துகளில் நடத்துநர் இல்லா சேவையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video

கோவை: தமிழக அரசு பேருந்துகளில் நடத்துநர் இல்லா சேவையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நிதிச்சுமையில் தவித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்டக்டர் இல்லா பேருந்து
அதன்படி தமிழக அரசு பேருந்துகளில் நடத்துனர் இல்லா பேருந்து சேவையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கண்டக்டர் இல்லா பேருந்து சேவையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

பாயிண்ட் டூ பாயிண்ட்
முதற்கட்டமாக கோவை - சேலம் இடையே இயக்கப்படும் பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளில் இந்த சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பேருந்துகள் புறப்படும் இடங்களிலேயே டிக்கெட் வழங்கப்படுவதால் நடத்துநர் இல்லாமல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, கும்பகோணம், சேலம்
இதைத்தொடர்ந்து மதுரை, கும்பகோணம், சேலம் கோட்டங்களில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இடையில் எங்கும் நிற்காத பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளில் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி,நாகர்கோவில்
இந்த சேவை சென்னை - வேலூர், சென்னை - திருவண்ணாமலை, சேலம் - ஓசூர், மதுரை - நெல்லை, தென்காசி - நெல்லை, மதுரை - திருச்சி, திருச்சி - காரைக்குடி, நாகர்கோவில்- நெல்லை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழகத்தில்
இதற்கு முன் இந்த திட்டம் ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகத்தால் செயல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications