வெடிக்காத வெடிமருந்துகள் வெடிக்கலாம்… இடிக்கப்பட்ட 11 மாடி கட்டடத்தை வேடிக்கை பார்க்க அனுமதி இல்லை
இடிக்கப்பட்ட 11 மாடி கட்டடத்தை வேடிக்கப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
சென்னை: நொடிப் பொழுதில் தரைமட்டமாக்கப்பட்ட 11 மாடிக் கட்டடத்தை அருகில் சென்று வேடிக்கைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
இடியும் நிலையில் இருந்த மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம் நேற்று மாலை நொடிப் பொழுதில் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அசம்பாவிதம் நடக்கும் ஆபத்து இருப்பது தெரிந்தும் கூட ஆயிரக்கணக்கான மக்கள் 11 மாடிக் கட்டடம் சீட்டுக்கட்டுப் போல் சரிவதை பார்க்க அந்தப் பகுதியில் கூடி இருந்தனர்.

அந்த ஆர்வம் சற்றும் குறையாமல், தரைமட்டமாக்கப்பட்ட இடத்தை பார்ப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். ஆனால், காவல் துறை அதற்கு அனுமதி மறுத்துள்ளது.
2 லாரிகளில் கொண்டு வரப்பட்ட வெடிமருந்துகள் 11 மாடிக்கட்டடத்தில் வைக்கப்பட்டு பின்னர், ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. வைக்கப்பட்ட வெடிமருந்துகள் முழுவதும் வெடிக்காமல் ஒரு சில இடங்களில் அப்படியே இருக்க வாய்ப்பு இருப்பதால் பொது மக்கள் அங்கு சென்று பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
சின்ன அசம்பாவிதமும் இல்லாமல் கட்டடம் இடித்து தகர்க்கப்பட்ட பின்னர், வேறு எதுவும் பிரச்சனை வரக் கூடாது என்பதற்காகவும் போலீசார் பொதுமக்களை அந்த இடத்தில் வேடிக்கை பார்க்க அனுமதிக்காமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு மவுலிவாக்கத்தில் 11 அடுக்கு கொண்ட 2 கட்டடங்கள் கட்டப்பட்டன. 2014ம் ஆண்டு திடீரென 2 கட்டடங்களில் ஒன்று பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 61 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். மேலும 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, இடிந்த கட்டடத்தின் அருகில் கட்டப்பட்ட இன்னொரு 11 மாடிக் கட்டடத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, இந்த கட்டடம் நேற்று மாலை 6.52 மணியளவில் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications