காட்டை விட்டு வர மாட்டோம்.. அடம் பிடிக்கும் பணகுடி கிராம மக்கள்!
நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஊர் பெயர் பிரச்சனை தொடர்பாக காட்டில் குடியேறிய மக்களுடன் தாசில்தார் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. ஊர்மக்கள் பிடிவாதமாக இருப்பதால் தொடர்ந்து இழுபறி நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்டது சிதம்பரபுரம்-யாக்கோபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் இரண்டாவது வார்டில் இரு தரப்பை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். ஒரு தரப்பினர் இந்த வார்டை யாக்கோபுரம் என்றும், மற்றொரு தரப்பினர் சிதம்பரபுரம் என்றும் அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் 2வது வார்டு பகுதியை சிதம்பரபுரம் என்று மாற்றி மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து பிரச்சனை கிளம்பிவிட்டது. யாக்கோபுரம் பகுதியை சேர்ந்த பொதுமககள் கடந்த 11ம் தேதி காட்டில் குடியேறும் போராட்டத்தை தொடங்கினர். 3வது நாளாக அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
காட்டிலேயே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அங்கேயே சமையல் செய்தும் சாப்பிட்டனர். மேலும் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக கன்னங்குளம், ஆவரைகுளம், செட்டிகுளம், புதியம்புதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஒரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ராதாபுரம் தாசில்தார் முருகன், பழவூர் சப் இன்ஸ்பெக்டர் ராமையா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர் பெயர் மாற்றம் செய்வதற்கான உத்தரவை கலெக்டர் திரும்ப பெற்றுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டரின் வாய்மொழி உத்தரவை ஏற்க மாட்டோம் என்றும் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இதனால் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications