அமைச்சர் பதவி கேட்டு அடம்... எடப்பாடியுடன் பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் சந்திப்பு
அமைச்சர் பதவி கோரி எடப்பாடி பழனிச்சாமியை பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச் செல்வன் இன்று சந்தித்து பேசினார்.
சென்னை: அமைச்சர் பதவி தரக் கோரி முதல்வருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் இன்று சந்தித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகஇரு அணிகளாக பிளவுபட்டது. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று பன்னீர் செல்வம் அணி. இந்நிலையில் சசிகலா முதல்வராவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த போது எம்எல்ஏ-க்களை ஓபிஎஸ் அணியினரோ , எதிர்க்கட்சியினரோ விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்ற பீதியில் சசிகலா இருந்தார்.
அப்போது 122 எம்எல்ஏ-க்களை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் சிறைக்காவலில் வைத்து விட்டார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களுக்கு பணம், தங்கம், கார் உள்ளிட்ட கனவிலும் கிடைக்காத பரிசு பொருள்கள் கிடைக்கும் என்று பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது.

பேரம் என்னாச்சு
இந்நிலையில் வாக்குறுதி அளித்ததாக கூறப்படும் சசிகலாவும், தினகரனும் சிறையில் உள்ளனர். மேலும் கூவத்தூரில் அமைச்சர் பதவியும் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் சிறைக்கு சென்றுவிட்டதாக கூவத்தூரில் பேசப்பட்ட பேரங்கள் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

ரகசிய கூட்டம்
இந்த பேரம் குறித்து தனித்தனி கோஷ்டிகளாக எம்எல்ஏ-க்கள் ரகசியக் கூட்டங்களை நடத்தி வந்தனர். அதில் தங்களுக்கு உறுதியளித்தது போல் அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் சட்டசபையை கூட்டினால் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பதால் போர்க் கொடி உயர்த்திய எம்எல்ஏ- க்களை சமாதானம் செய்யும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டு வருகின்றனர்

தோப்பு கோஷ்டிக்கு அழைப்பு
கடந்த 2 தினங்களுக்கு தோப்பு வெங்கடாசலம் தலைமையில் சில எம்எல்ஏ-க்கள் அழைப்பின்பேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். அப்போது அவரிடம் ஆலோசனை நடத்தினர். இதற்கு அடுத்த நாளே 15 எம்எல்ஏ-க்கள் முதல்வரை சந்தித்தனர்.

தமிழ்செல்வன் சந்திப்பு
இந்நிலையில் அமைச்சர் பதவி கேட்டு தமிழ்ச் செல்வன் தலைமையில் போர் கொடி உயர்த்திய எம்எல்ஏ-க்களை அமைச்சர் செங்கோட்டையன் சமாதானப்படுத்தினார். எனினும் சமாதான ஆகாத நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்ச்செல்வன் சந்தித்தார். அமைச்சரவை மாற்றத்தில் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications