பெருமாள் முருகனை சென்னை கல்லூரிக்கு மாற்றக்கோரி வழக்கு- தமிழக அரசுக்கு நோட்டீஸ்!!
சென்னை: மாதொருபாகன் நாவலை எழுதிய பேராசிரியர் பெருமாள் முருகனை சென்னை கல்லூரிக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் பொதுச் செயலாளர் பாலமுருகன். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பெருமாள் முருகன், மாதொருபாகன் என்ற பெயரில் நாவல் எழுதினார். இதில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்களை எதிர்த்து, திருச்செங்கோடு மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி, பெருமாள் முருகனை நிர்பந்தம் செய்து, அவர் எழுதிய நாவலை திரும்பப்பெறுவதாக அறிவிக்க வைத்தார்கள்.
இதுசம்பந்தமாக, பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் பெருமாள் முருகனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை.
மேலும் பெருமாள் முருகனின் மனைவி எழிலரசி, அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எனவே இருவரது பாதுகாப்பான வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரிக்கு இடம் மாற்றம் செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும் தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்கள்.
மேலும், மாதொருபாகன் நாவல் தொடர்பான வழக்கு ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கோடு இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவில் கூறியுள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications