பெருமாள் முருகனை சென்னை கல்லூரிக்கு மாற்றக்கோரி வழக்கு- தமிழக அரசுக்கு நோட்டீஸ்!!
சென்னை: மாதொருபாகன் நாவலை எழுதிய பேராசிரியர் பெருமாள் முருகனை சென்னை கல்லூரிக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் பொதுச் செயலாளர் பாலமுருகன். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பெருமாள் முருகன், மாதொருபாகன் என்ற பெயரில் நாவல் எழுதினார். இதில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்களை எதிர்த்து, திருச்செங்கோடு மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி, பெருமாள் முருகனை நிர்பந்தம் செய்து, அவர் எழுதிய நாவலை திரும்பப்பெறுவதாக அறிவிக்க வைத்தார்கள்.
இதுசம்பந்தமாக, பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் பெருமாள் முருகனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை.
மேலும் பெருமாள் முருகனின் மனைவி எழிலரசி, அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எனவே இருவரது பாதுகாப்பான வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரிக்கு இடம் மாற்றம் செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும் தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்கள்.
மேலும், மாதொருபாகன் நாவல் தொடர்பான வழக்கு ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கோடு இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவில் கூறியுள்ளனர்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications