போயஸ் இல்லம் எனக்கும், தீபாவுக்கும்தான் சொந்தம்.. தீபக் தடாலடி
அபராதத்தை வேண்டுமானால் லோன் போட்டு, நானே தனியாக கட்டுவேன். அல்லது வேறு யார் அபராதம் கட்டினாலும், போயஸ் இல்லம் எனக்கும், தீபாவுக்கும்தான் சொந்தம் என்று தீபக் தெரிவித்துள்ளார்.
சென்னை: போயஸ் இல்லம் எனக்கும் எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.
டிவி சேனல் ஒன்றுக்கு தீபக் அளித்த பேட்டியில் கூறியதாவது: போயஸ் இல்லத்திற்கு சொந்தக்காரர்கள் நானும், எனது சகோதரி திருமதி. தீபாவும்தான். ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அபராதம் செலுத்திய பிறகு எங்களுக்குத்தான் போயஸ் இல்லம் சொந்தம் ஆகும்.

அபராதத்தை வேண்டுமானால் லோன் போட்டு, நானே தனியாக கட்டுவேன். அல்லது வேறு யார் அபராதம் கட்டினாலும், போயஸ் இல்லம் எனக்கும், தீபாவுக்கும்தான் சொந்தம்.
எனக்கும் தீபாவுக்கும் எப்போதுமே மனஸ்தாபம் இருந்தது கிடையாது. சகோதரிக்கு அரசியல் ஆர்வம் உள்ளது. எனக்கு இதில் ஆர்வம் இல்லை, அவ்வளவுதான் வித்தியாசம் என்றார்.
சசிகலா ஏற்கனவே அந்த வீட்டில் இருந்தாரே என்ற கேள்விக்கு, அதைப்பற்றி நாங்களே கவலைப்படவில்லை என்று தீபக் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications