காரில் கட்டுகட்டாக பணம்: தமிழக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
நெல்லை: கோவையில் சிக்கியது ஹவாலா பணம் என்று தகவல் தெரிவிப்பதால் தமிழக எல்லையில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணி செய்து வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்ற ஒரு சொகுசு கார் கோவையில் விபத்துக்கு உள்ளானது. அதன் ரகசிய அறைகளில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. அது ஹவாலா பணமாக இருக்கும் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்தம் 2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அவருக்கு இந்த பணம் எப்படி வந்தது என கணக்கு கேட்டபோது அவரிடம் சரியான பதில் இல்லை. இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசை இருக்கலாம் என கூறப்படுவதால் இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக மணல், சல்லி, எரிசாராயம் ஆகியவை கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. புளியரை செக்போஸ்ட்டில் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் கடத்தல் கும்பல் போலீசாரின் கண்ணீல் மண்ணை தூவி விட்டு கடத்தலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
குறிப்பாக லாரிகளில் ரகசிய அறை அமைத்து கடத்துவது, கார் மற்றும் வேன்களின் டோர்களில் ரகசிய அறை அமைத்து கடத்துவது போன்ற காரணத்தால் போலீசார் கோட்டை விடுகின்றனர். குறிப்பாக டாஷ் போர்டு, டிக்கி போன்ற இடங்களில் சோதனை போடாமல் விட்டு விடுகின்றனர். இது கடத்தலுக்கு கஷ்டம் இல்லாமல் போய்விடுகிறது. இந்த நிலையில் ஹவாலா பணம் சிக்கியதை அடுத்து புளியரை செக்போஸ்ட்டில் போலீசார் கார் உள்ளிட்ட வாகனங்களில் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications