காரில் கட்டுகட்டாக பணம்: தமிழக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
நெல்லை: கோவையில் சிக்கியது ஹவாலா பணம் என்று தகவல் தெரிவிப்பதால் தமிழக எல்லையில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணி செய்து வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்ற ஒரு சொகுசு கார் கோவையில் விபத்துக்கு உள்ளானது. அதன் ரகசிய அறைகளில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. அது ஹவாலா பணமாக இருக்கும் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்தம் 2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அவருக்கு இந்த பணம் எப்படி வந்தது என கணக்கு கேட்டபோது அவரிடம் சரியான பதில் இல்லை. இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசை இருக்கலாம் என கூறப்படுவதால் இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக மணல், சல்லி, எரிசாராயம் ஆகியவை கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. புளியரை செக்போஸ்ட்டில் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் கடத்தல் கும்பல் போலீசாரின் கண்ணீல் மண்ணை தூவி விட்டு கடத்தலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
குறிப்பாக லாரிகளில் ரகசிய அறை அமைத்து கடத்துவது, கார் மற்றும் வேன்களின் டோர்களில் ரகசிய அறை அமைத்து கடத்துவது போன்ற காரணத்தால் போலீசார் கோட்டை விடுகின்றனர். குறிப்பாக டாஷ் போர்டு, டிக்கி போன்ற இடங்களில் சோதனை போடாமல் விட்டு விடுகின்றனர். இது கடத்தலுக்கு கஷ்டம் இல்லாமல் போய்விடுகிறது. இந்த நிலையில் ஹவாலா பணம் சிக்கியதை அடுத்து புளியரை செக்போஸ்ட்டில் போலீசார் கார் உள்ளிட்ட வாகனங்களில் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications