பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் 72 மணி நேர வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் 72 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே சங்க ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று முதல் 72 மணி நேர போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் ரயில்வே சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் தனியாரை அனுமதிக்கக்கூடாது, 7வது ஊதியக் குழுவினை அமல்படுத்த வேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, சில நாட்களுக்கு முன் அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சகம், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சகங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று ரயில்வே ஊழியர்கள் தங்களது 72 மணி நேர போராட்டத்தை துவங்கி உள்ளனர். இந்தப் போராட்டத்தில், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், பாதுகாப்பாளர்கள் சங்கம், ஓட்டுநர் சங்கம் மற்றும் ரயில் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் சங்கம் ஆகிய 4 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ரயில்வே ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவர்கள். எனவே, பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுத்து நிறுத்தும் வகையில் அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications