கடலூரில் மீண்டும் பலத்த மழை...!
கடலூரில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்யும் மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது.
கடலூர் : கடலூரில் ஓய்ந்திருந்த மழை மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்து வரும் மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றக்கிழமை மாலை முதல் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கடலூர் நகரில் நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மாலை வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் இரவு 7 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கடலூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
இதேபோல் கடலூர், பண்ருட்டி, கண்டரக்கோட்டை, அண்ணாகிராமம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் 3 சென்டிமீட்டர் மழையும், கடலூரில் 2 சென்டிமீட்டர் மழையும் பெய்தது.
கடந்த 2 நாட்களாக கடலில் கடல் சீற்றமும், சூறை காற்றும் வீசுவதால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுக பகுதியிலும், கடற்கரை ஓரத்திலும் விசைப்படகுகளும், பைபர் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சற்று ஓய்ந்திருந்த மழையானது தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. கடலூரில் மாலையில் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரமாக நீடிக்கிறது. இதனால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது. இதே போன்று கடலூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக மெழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications