ராம்குமாருக்கு ஜாமீன் கேட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வழக்கில் இருந்து திடீர் விலகல்!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாருக்கு ஆதரவாக வாதாடப்போவதில்லை என அவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கடந்த 1ம் தேதி நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
கைது செய்வதற்காக போலீசார் சென்றபொழுது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது. சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார்.

கிருஷ்ணமூர்த்தி
இந்நிலையில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ராம்குமாருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை என்றும் கிருஷ்ணமூர்த்தி தனது மனுவில் கூறியிருந்தார்.

கழுத்தை அறுத்தது யார்?
மனு தாக்கலுக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி, போலீசாருடன் சென்ற நபர்கள்தான் ராம்குமார் கழுத்தை அறுத்தனர். அவர் தற்கொலைக்கு முயலவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

சர்ச்சை
கிருஷ்ணமூர்த்தி பரபரப்பை கிளப்பிய நிலையில், அவர் ராம்குமார் குடும்பத்தாரிடம் அனுமதியின்றி சுயமாக சென்று ஆஜரானதாக சர்ச்சை எழுந்தது. நேற்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் ஜெகன், இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

வாதம்
கிருஷ்ணமூர்த்தி வாதிடுகையில், சிவில் வழக்குகளில்தான் வக்காலத்து தேவை, கிரிமினல் வழக்குகளில் அதுவும் குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்கும்போது அவரிடம் ஒப்புதல் பெற்று வாதிட தேவையில்லை என்று கூறினார். ராம்குமார் குடும்பத்தார் மகேந்திரன் என்ற வக்கீலை அணுகியதாகவும், அவருக்கு உதவியாக தான் ஆஜரானதாகவும் நிருபர்களிடமும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

விலகுவதாக அறிவிப்பு
இந்நிலையில், ராம்குமார் வழக்கில் இருந்து வெளியேறுவதாக முகநூல் பதிவில் கிருஷ்ணமூர்த்தி இன்று தெரிவித்துள்ளார். தனது ஜூனியர்களுக்கு உதவவே வழக்கிற்குள் வந்ததாகவும், அதுவும் ஜாமீன் விவகாரத்திற்கு மட்டுமே என்றும் கூறியுள்ள கிருஷ்ணமூர்த்தி விமர்சனங்கள் அதிகரிப்பதாகவும் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ராம்குமாருக்கு உதவ முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு, எதிர்ப்பு
கிருஷ்ணமூர்த்தியின் முடிவுக்கு முகநூலில் ஆதரவு மற்றும் மறுப்பு என இருவேறு வகை குரல்களை பார்க்க முடிந்தது. வழக்கறிஞர், டாக்டர்கள் போன்றோர் குற்றவாளியின் குற்றத்தை பார்த்து கடமையை செய்ய கூடாது, எனவே விலகல் முடிவை கைவிட வேண்டும் என்று சிலரும், நல்ல முடிவு எடுத்தீர்கள் என சிலரும் கருத்து கூறினர்.

பல காரணங்கள்
ராம்குமார் குடும்பத்தார் சம்மதம் இன்றி கிருஷ்ணமூர்த்தி ஆஜரான சர்ச்சை, இந்த வழக்கில் போலீசாருக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்களால் எழுந்த சர்ச்சை, பெண் வக்கீல்கள் கோர்ட்டில் திரண்டு வந்து ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என கூறி போராடிய விவகாரம் என பல விஷயங்கள் கிருஷ்ணமூர்த்தி முடிவுக்கு காரணம் என தெரிகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications