துப்பாக்கிச் சூட்டில் பலியான 12 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு!
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து இரண்டு நிபந்தனை விதித்துள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான 12 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூடுவதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே உடல்களை வாங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 100வது நாளை எட்டியது. இதற்காக பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், தடையையும் மீறி பல்லாயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களின் மீது போலீஸார் தடியடி தாக்குதல் நடத்தினர். மக்களை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியானவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து, இரண்டு நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக எழுத்துப் பூர்வமாக எழுதித் தர வேண்டும் என்றும், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் உடல்களை வாங்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications