ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதா? – நள்ளிரவு ரெய்டுக்கு ஆர்கே நகர் மக்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: ஆர்.கே நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிரடி படையினர் நள்ளிரவில் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் வீடு வீடாக புகுந்த அதிரடிப்படையினர், அங்குள்ள பொருட்களையும் சோதனை என்ற பெயரில் கலைத்துப் போட்டதாக கூறப்படுகிறது.

அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கை கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர். நள்ளிரவில் பெண்கள், குழந்தைகள் இருக்கும் வீடு என்று கூட பாராமல் போலீசார் அனைவருக்கும் தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆனால் ஆர்.கே.நகர் பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கு இடையிலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்தே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல கட்சி பிரமுகர்கள் இரவில் மக்களை வீட்டிற்கே வரவைத்தும், அவர்களே வீடு வீடாக சென்றும் பணம் அளித்து வருவதால் தான் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தொண்டர்களும், மக்களும் அதிரடிப்படையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில இடங்களில் அவர்களே பணப்பட்டுவாடா செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பாக யாரையும் அதிரடிப்படையினர் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications