ரூ.10 நாணயத்தை யாரேனும் வாங்க மறுத்தால்.. இதைப் படிங்க மக்களே முதல்ல!
ரூ.10 நாணயத்தை யாரேனும் வாங்க மறுத்தால் தேச துரோக வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரப்பிரதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: ரூ.10 நாணயம் செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் அந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். அவ்வாறு மறுத்தால் குற்றவியல் சட்டப்படி தேச துரோக வழக்கே பதிவு செய்யலாமாம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிக மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் கிளம்பின.
அதாவது புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் அடிக்கப்படவுள்ளது, ரூ.2000 நோட்டை செல்லாததாக அறிவிக்க திட்டமிடுகிறார்கள், ரூ.10 நாணயம் செல்லாது என்று அந்த வதந்திகள் கச்சை கட்டிப் பறந்தன.

விளக்கம் கொடுத்தும் ஏற்காத வணிகர்கள்
இதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் இல்லை என்று விளக்கமளித்தன. இருந்தபோதிலும் அவற்றை வணிகர்களும், பொதுமக்களும் ஏற்கவில்லை.

குறியீடு இல்லாததால்
அந்த நாணயத்தில் கரன்சிக்கான குறியீடு ஏதும் இல்லாததால் அது செல்லாது என்றே மக்கள் கருதுகின்றனர். கடந்த 2009-ல் தயாரிக்கப்பட்ட ரூ. 10 நாணயங்களில் கரன்சிக்கான குறியீடு இல்லை என்றாலும் கூட அவை செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்திவிட்டது.

யாரும் நிராகரிக்க முடியாது
இந்நிலையில் ரூ.10 நாணயங்கள் வாங்காதது குறித்து உத்தரப்பிரதேச மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ரூ.10 நாணயம் தேசிய கரன்சியாகும். அந்த நாணயங்களின் மதிப்பை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. எனவே அதை ஏற்க மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

தேசதுரோக வழக்கே போடலாம்
ரூ.10 நாணயங்களை வாங்க யாரேனும் மறுத்தால், அவர்கள் மீது தேசதுரோக வழக்கை பதிவு செய்யலாம். ஆர்பிஐ விதிமுறைகளை எடுத்துக் கூறி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவாகும் வழக்குகளின் மீது காவல்துறையும் விசாரணையை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications