ஆண்டிபட்டியில் காட்டுக்கு வேட்டைக்குப் போனவர் பிணமாக வந்த சோகம் - வீடியோ
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சமயன் வேட்டைக்கு போனபோது நாட்டு துப்பாக்கி குண்டுபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
தேனி: ஆண்டிப்பட்டியில் வேட்டைக்குச் சென்ற சமயன் என்பவர் மீது நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்துள்ளார். இது தொடர்பாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சமயன். இவர் தன் நண்பர்களுடன் வனப்பகுதிக்குள் வேட்டைக்குள் சென்றுள்ளார். அவர்கள் வேட்டைக்கு வனத்துக்குள் அலைந்துகொண்டிருந்த போது, எங்கிருந்தோ வந்த நாட்டுத் துப்பாக்கி குண்டு சமயன் நெஞ்சுப் பகுதியில் பட்டு அவர் அங்கேயே மரணமடைந்துள்ளார்.
இந்த கொலை சம்பந்தமாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications