உலக வரலாற்றிலேயே முதல் முறையாக.. அதிமுக இணைப்பு தொடர்பாக போர்க் கப்பலில் ஆலோசனை!!
உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஓபிஎஸ் அணியுடன் இணைப்பு தொடர்பாக அதிமுக அம்மா அணியினர் போர்க் கப்பலில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் சென்னை துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் போர்க்கப்பல் புறப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அலுவலகத்திலிருந்து அனைத்து எம்எல்ஏக்களும் இன்று சென்னை வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை அருகே வங்கக் கடலில் நங்கூரமிட்டுள்ள ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலை பார்ப்பதற்காக என்று கூறப்பட்டிருந்தாலும், முக்கிய ஆலோசனை நடத்தவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று சென்னையில் ஆஜரான எம்எல்ஏக்கள் அனைவரும் ஐஎன்எஸ் போர்க்கப்பல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு போர்க்கப்பல் புறப்பட்டது.

யார் யார்?
முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ள இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், போக்குவரத்து துறை விஜயபாஸ்கர், ஓ. எஸ் மணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மற்றும் அனைத்து எம்எல்ஏக்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஓபிஎஸ் அணியுடன்…
இந்தப் போர்க்கப்பல் ஆலோசனையில் ஓபிஎஸ் அணியுடன் இணைவது குறித்துத்தான் விவாதிக்கப்படுகிறது கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், அதிமுக அம்மா அணி ஓபிஎஸ் அணியுடன் இணைய குழு அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆலோசனை நடத்தப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது,

கூவத்தூர்
சசிகலா தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய போது கூவத்தூரில் 122 எம்எல்ஏக்கள் சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதே போன்று தற்போது மீண்டும் சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் போர்க்கப்பலில் பயணம் செய்து இணைப்பு குறித்து பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக...
பிளவு பட்ட அதிமுக மீண்டும் இணைவது குறித்து ஓரு கப்பலில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ஐஎன்எஸ் போர்க்கப்பலில் நடைபெறும் ரகசிய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துவிட்டால் இரட்டை இலை சின்னம் மீண்டும் மீட்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications