கட்சியை கபளீகரம் செய்ய ஜெயில விட்டு வெளியே வந்தாகணும் : சசியின் மறுசீராய்வு மனுவின் பின்னணி
அதிமுகவை கபளீகரம் செய்ய ஜெயிலில் இருந்து வெளியே வர வேண்டும் என்று சசிகலா விரும்புவதாகவும் அதன் ஒரு பகுதியாகவே மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : தற்போது ஊசலாட்டத்தில் உள்ள அதிமுகவை தங்கள் வசமாக்க தான் வெளியே வந்தாக வேண்டும் என்று சசிகலா விரும்புவதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று அறிவித்ததையடுத்து, பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசியும், ஆண்கள் சிறையில் சுதாகரனும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட 2 மாதத்தில் சசிலாவை பலர் சந்தித்து செல்வதாக சிறைத்துறை குற்றம்சாட்டியதையடுத்து சசிகலாவை சந்திப்போரின் எண்ணிக்கை குறைந்தது.

ஏப்ரல் மாதத்தில் 3 முறை மட்டுமே சசிகலாவை வெளியட்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பிளவு பட்டு கிடக்கிறது, தினகரனும் சிறை சென்றுவிட்ட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் குடும்ப ஆதிக்கம் அதிமுகவில் குறைந்து வருவதாக சசிகலா கருதுகிறாராம். கடந்த சில நாட்களாகவே அமைதியாக இருந்த சசி, தனக்கு வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் நேற்று மன தாக்கல் செய்தார்.
தீர்ப்பை மறுசீராய்வு செய்யும்படி தாக்கல் செய்த பின்னணியில், குற்றவாளி என்பதில் எந்த திருத்தமும் செய்யப்படாவிட்டாலும் உடல்நிலையைக் காரணம் காட்டி தண்டனையை குறைக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் பெயில் பெறுவதற்கான சட்ட நடைமுறைகளில் மறுசீராய்வு மனு முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே இரண்டில் எது நடந்தாலும் தனக்கு சாதகமாகவே இருக்கும் என்று சசிகலா கருதுகிறாராம்.
தற்போதைய சூழலில் ஜாமீன் கிடைத்தால் அதிமுகவை தங்கள் வசமேவைத்துக் கொள்ள தீவிரமாக செயல்பட முடியும் என்றும் சசி நினைக்கிறாராம். ஆனால் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரிந்தால் மட்டுமே சசிகலாவின் எண்ணம் நிறைவேறுமா என்பது தெரிய வரும்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications