படிக்கட்டில் தொங்கி பயணம் செய்யும் மாணவர்கள் - பதறும் பெற்றோர்கள்
நெல்லை: பள்ளிக்கு பேருந்தில் செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வருவதால் பெற்றோர் பீதி அடைந்துள்ளனர். கூடுதல் பேருந்துகளை இயக்கினால் இந்த பதற்றம் இருக்காது என்பது பெற்றோர்களின் கோரிக்கை.
தமிழதத்தில் கடந்த இரண்டாம் தேதி பள்ளிகள் விடுமுறை முடிந்து வழக்கம் போல் திறந்தன. பளளிகள் திறக்கப்பட்டு விட்டதால் வெளியூர் மற்றும் கிராமங்களில் இருந்து வந்து செல்லும் மாணவ, மாணவிகள் அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
பழைய மாணவர்களை பொறுத்தவரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை காட்டி பயணம் செய்து வருகின்றனர். காலையில் பள்ளிகளுக்கு வரவும், மாலையில் பள்ளி விட்டு செல்லவும் இவர்கள் குறிப்பிட்ட அரசு பஸ்சுக்கு நீண்ட நேரம் காத்திருந்து அதில் ஏற்கனவே பயணம் செய்யும் பயணிகளுடன் புத்தக பை, உணவு பொருட்களுடன் போட்டி போட்டு ஏறுகின்றனர்.
இந்த பஸ்சை தவற விட்டால் அடுத்த பஸ்சுக்கும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பலர் பஸ்சின் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் தொங்கி கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதை கருத்தில் கொண்டு அரசு பஸ்சில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியது.
அண்டை மாநில மாணவ, மாணவிகளை பொறுத்தவரை அவர்களுக்காக குறிப்பிட்ட நேரத்தில் தனி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மாணவிகளுக்கு மட்டும் தனி பஸ் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழகத்திலும் மாணவ, மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்கினால் டிரைவர்களும், நடத்துனர்களும் பொறுப்பாக நடந்து கொள்ளுவார்கள். கிராமப்புற மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் வீடு போய் சேர எதுவாக இருக்கும். அரசு இந்த திட்டத்தை விரைந்து அறிமுகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications