சென்னை ஐஐடியில் மாணவிகளுக்கு பாலியல் உட்பட பல தொல்லை.. பின்னணியில் யார், யார்?
Recommended Video

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவிகளுக்கு பாதுகாவலர்கள், சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை ஐஐடியில் மாணவ-மாணவிகள் பாலின வேறுபாடு மறந்து பழகுவது வழக்கம். சமீபத்தில் மாணவன் ஒருவர் தனது தோழியை கேண்டீனில், கட்டிபிடித்து வழியனுப்பி வைத்தபோது, அதை ஊழியர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள கூடாது என அவர் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இதை எதிர்த்து, மாணவ-மாணவிகள் ஐஐடி வளாகத்தில் கட்டிப்பிடிக்கும் போராட்டத்ததை நடத்தியுள்ளனர்.

ஐஐடி சர்வே
இதனிடையே, மாணவிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அதிலும் குறிப்பாக பாதுகாவலுக்கு உள்ள செக்யூரிட்டிகள் நடுவே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது. ஐஐடி மெட்ராசில் உள்ள 'தி பிப்த் எஸ்டேட்' என்ற மாணவர்கள் நடத்தும் மீடியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய சர்வேயில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு மாணவிகள் இதுகுறித்து பெயரை வெளியே தெரிவிக்காமல் ஊடகங்களிடம் தற்போது வாய் திறந்துள்ளனர்.

கலாச்சார பாதுகாவலர்கள்
இதுபற்றி ஒரு மாணவி கூறுகையில், "கலாச்சார பாதுகாவலர்கள் போல செக்யூரிட்டிகள் நடந்து கொள்கிறார்கள். ஒருநாள் இரவில், ஐஐடி வளாகத்தில் நானும் சில மாணவர்களும் அமர்ந்து பேசியபோது அங்கே வந்த செக்யூரிட்டி ஒருவர், இதுபோல நடந்து கொள்வது வருங்கால திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார். நாங்கள் தவறு செய்யவில்லை. உட்கார்ந்திருந்த இடம் இருட்டாக இருந்ததை வைத்து அவரே முடிவு செய்து அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார். வேண்டுமானால் எனது ரூமில் சென்று செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் அறுவெறுப்பாக பேசினார்" என்று தெரிவித்தார்.

பெரும்பாலான மாணவிகள்
ஐஐடியில் படிக்கும் ஐந்தில் 4 மாணவிகளாவது செக்யூரிட்டிகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வேயில் தெரிவித்துள்ளனர். சில செக்யூரிட்டிகள் ஆண் மாணவர்களை அடித்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் மொத்தம் 815 பேர் பங்கேற்று கருத்து கூறியுள்ளனர். அதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உடன்படிக்கும் மாணவர்கள்
ஐஐடியில் உடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக சர்வேயில் கருத்து கூறியதில் 67 சதவீதம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். ஆண் மாணவர்களும் கூட வளாகத்திற்குள் பாலியல் சீண்டல்களுக்கு உட்பட்டுள்ளதாக அந்த சர்வே தெரிவித்துள்ளது. உடன் படிப்பவர்கள், செக்யூரிட்டிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்களாம்.

சரி செய்ய நடவடிக்கை
பாலியல் சீண்டல்களை தவிர்க்க மாணவ, மாணவிகள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ஆண்-பெண் இணைந்து செயல்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும், ஆண்-மகளிர் விடுதிகளை இணைத்து (co-ed hostels) செயல்படுத்த வேண்டும், பாலியல் பிரச்சினை பற்றி ஓபனாக விவாத நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது போன்றவை அந்த கோரிக்கைகள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications