சிறுவாணி தண்ணீரை தடுப்பதா? கேரளாவை கண்டித்து போராட்டம்: சீமான்
திருநெல்வேலி: அண்டை மாநிலங்கள் தமிழகத்தை இழிவாக நினைக்கிறார்கள். தமிழகத்திற்கு வரக்கூடிய சிறுவாணி தண்ணீரை கேரளா அடைத்துள்ளது. இதனை கண்டித்து வருகிற 24-ந்தேதி கோவையில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று நாம் தமிழர்கட்சியின் நிறுவனர் தலைவர் சீமான் கூறியுள்ளார். இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் சீமான் இன்று நெல்லை வந்தார். அவர் சிந்துபூந்துறை சாலை தெருவில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ராஜபக்சே நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்ததாக கூறுகிறார்.
மீனவர்களை கைது செய்யும்போது அவருக்கு எந்த எண்ணம் இருந்தது. விமானங்களை கடத்தும் தலீபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு மக்களை சிறைபிடித்து இலங்கை இந்தியாவை மிரட்டுகிறது. எனவே இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களை தாக்கி வந்த சிங்களர்கள் தற்போது இஸ்லாமியர்களையும் தாக்க தொடங்கியுள்ளனர். இலங்கையில் தமிழ் இனத்தையே ஒழிக்க நினைக்கிறார்கள்.
இலங்கை ஜனநாயக நாடு என்று கூறுபவர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இடது சாரி கட்சியினர் சிந்திக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு தமிழர்கள் நலனில் சிறப்பாக செயல்படும் என எண்ணுகிறோம்.
அண்டை மாநிலங்கள் தமிழகத்தை இழிவாக நினைக்கிறார்கள். தமிழகத்திற்கு வரக்கூடிய சிறுவாணி தண்ணீரை கேரளா அடைத்துள்ளது. இதனை கண்டித்து வருகிற 24-ந்தேதி கோவையில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று சீமான் கூறியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications