வேலூர்: ஒரே வீட்டில் பிடிபட்ட 100 பாம்பு குட்டிகள் - வனத்துறையினர் மீட்பு - மக்கள் அதிர்ச்சி
Recommended Video

வேலூர்: குடியாத்தம் அருகே ஒரு வீட்டில் இருந்து குவியல் குவியாக பாம்புகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த இந்திராநகரில் வசித்து வருபவர் ஜானகிராமன். இவரது வீட்டின அருகே பாம்புகள் அதிகம் இருப்பதாக தீயணைப்புக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் ஜானகிராமன் வீடு மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து இருந்தது. வீட்டிற்குள் சுமார் 100 சாரப்பாம்பு குட்டிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பு குட்டிகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்புக்குட்டிகளை காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர். வீட்டிற்குள் பாம்பு பண்ணையே இருந்ததைக் கண்டு இந்திராநகர் பகுதி பொதுமக்கள் பாம்பின் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications