ஸ்ரீரங்கம்: கருத்து கணிப்புக்கு தடை- யாத்ரி நிவாஸில் இருந்து அதிமுகவினர் வெளியே உத்தரவு
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து கணிப்பு வெளியிட தேர்தல் அதிகாரி தடை விதித்துள்ளார். தேர்தல் முடிந்து 48 மணி நேரத்துக்கு கருத்து கணிப்புகள் வெளிடக் கூடாது என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
கோவிலுக்கு வரும் பயணிகளுக்காக கட்டப்பட்டிருந்த யாத்ரீநிவாஸில் அதிரடி சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு தங்கியிருக்கும் ஆளுங்கட்சியினரை வெளியேறவும் உத்தரவிட்டுள்ளனர்.

பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தொகுதி முழுவதும் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் தேர்தல் பிப்ரவரி 13ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றார். தேர்தல் முடிந்து 48 மணி நேரத்துக்கு கருத்து கணிப்புகள் வெளியிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
யாத்ரி நிவாஸில் சோதனை
இதனிடையே பக்தர்கள் தங்குவதற்கு உருவாக்கப்பட்ட ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அதிமுக நிர்வாகிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அங்கு தங்கியுள்ளவர்களை உடனே வெளியேற்றி 16ம் தேதி வரை யாத்ரி நிவாஸை பூட்டி சீல் வைக்க வேண்டும் என எதிர்கட்சியினர் அளித்த புகார் மனுவை அடுத்து அங்கு தேர்தல் அலுவலர் மனோகரன் சோதனை மேற்கொண்டார்.
வெளியேற மறுப்பு
அங்கு தங்கியிருந்த அதிமுகவினரை வெளியேற தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார். ஆனால் 11ஆம் தேதிவரை தங்குவதற்கு பணம் கட்டியிருப்பதாக கூறி அவர்கள் வெளியேற மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அதிமுகவினருக்கும் தேர்தல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தேர்தல் அலுவலகத்திற்கு சீல்
இதனிடையே ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கட்சிகளின் 6 தேர்தல் அலுவலகத்தையும் தேர்தல் அலுவலர் மனோகரன் சீல் வைத்துள்ளார்.
சின்னங்கள் அழிப்பு
மேலும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் வரையப்பட்ட சின்னங்கள் அளிக்கப்பட்டது. இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெறுவதால் 15 பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் அலுவலகர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications