பணமோசடி வழக்கு: வேந்தர் மூவிஸ் மதன் வாக்குமூலம்... பச்சமுத்து ஆஜர்
மதன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு ஆஜராகியுள்ளார்.
சென்னை: மருத்துவ சீட்டு மோசடி வழக்கு விசாரணைக்காக பச்சமுத்து ஆஜராகியுள்ளார். மதன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பச்சமுத்துவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் கடந்த மே மாதம் 29ம் தேதி தலைமறைவானார். மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாக கூறி மதன் மீது 123 பேர் புகார்கள் பதிவாகின. மொத்தம் ரூ.84 கோடியே 27 லட்சம் மோசடி செய்திருப்பதாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் தலைமறைவான மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மோசடி புகார்கள் ஒருபக்கம் குவிய, ஆட்கொணர்வு மனுவால் நீதிமன்றம் நெருக்கடி கொடுக்க, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருப்பூரில், அவரது பெண் தோழி வர்ஷா வீட்டில் ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை கடந்த 21ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட மதனிடம் 7 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த சைதாப்பேட்டை 11-வது நீதி மன்றம் கடந்த 23ம் தேதி அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து மதனை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதன் மீதான மோசடி புகார்கள், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துகள் குறித்த தகவல்கள், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, தலைமறைவாக இருந்தபோது எங்கெல்லாம் சென்றார் போன்ற தகவல்களை பெறுவதற்காக போலீஸ் காவலில் விசாரணை நடந்து வருகிறது.
போலீசாரிடம் மதன் அளித் துள்ள வாக்குமூலத்தில், மாணவர்களிடம் வசூலித்த பணத்தின் பெரும் பகுதியை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து விசாரணை நடத்துவதற்காக எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்துவின் மகன்களான ரவி பச்சமுத்து, சத்தியநாராயணா, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் சேதுராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கு மாறு மத்திய குற்றப்பிரிவு போலீ ஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று காலையில் ரவி பச்சமுத்து மற்றும் சத்தியநாராயணா ஆகியோரின் வழக்கறிஞர்கள், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் சேதுராமன் ஆகியோர் எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மதனிடம் பணம் வாங்கிய மேலும் பலரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து ஆஜரானார். மதன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பச்சமுத்துவிடம் விசாரணை நடைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications