மழை வெள்ளத்தை தெர்மாகோல் வைத்து செல்லூர் ராஜூ தடுப்பாரா? - ஸ்டாலின் கிண்டல்
அரசு மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை : மழை வெள்ளத்தை தெர்மாகோல் வைத்து செல்லூர் ராஜூ தடுப்பாரா என்று கேட்டு கிண்டலடித்துள்ளார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.
தமிழகத்தில் குடிமரமாத்து பணிகள் நடைபெற்று இருந்தால் அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத்தயாரா என்றும் முதல்வருக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் ஸ்டாலின்.
தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் இன்று திருச்சியில் தி.மு.க சார்பில் நடைபெற்று வரும் ஏரி பராமரிப்பு பணிகளைப் பார்வையிட்டார்.
அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ' இதுவரை மழைக்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

குடிமராமத்து பணி
அமைச்சர்கள் அனைவரும் மக்களிடம் பொய் சொல்லி வருகிறார்கள். 400 கோடி ரூபாய்க்கு குடி மரமாத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அரசு. அப்படி பணிகள் நடைபெற்று இருந்தால் எங்கு, எப்போது நடைபெற்றது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட இந்த அரசு தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

குடிமராமத்து பணியில் ஊழல்
மேலும், குட்காவைத் தொடர்ந்து இதிலும் ஊழல் நடந்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். மழை பெய்யும் சென்னையை விட்டுவிட்டு சேலத்தில் முதல்வர் ஆய்வுக்கூட்டம் நடத்துவது ஏன் என்றும் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

வெள்ளத்தை தடுப்பது எப்படி
மழை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசு, திடீரென வெள்ளம் வந்தால் செல்லூர் ராஜூவை வைத்து தெர்மாகோல் கொண்டு வெள்ளைத்தை தடுக்கப்பார்க்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

நிதி வாங்கிய அரசு
ஓ.என்.ஜி.சி நிறுவனம் அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பித்து இருப்பதைக் குறித்த கேள்விகளுக்கு, அ.தி.மு.க அரசு அவர்களிடம் நிதி வாங்கி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இவர்கள் அதைத் தடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications