போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்.. எடப்பாடியாருக்கு போன் போட்டு பேசிய ஸ்டாலின்
முதலமைச்சர் பழனிச்சாமியுடன் தொலைபேசியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் சமூக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் அரசு சமூகமான முடிவை எடுக்கவேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் கலாட்டாக்களும், வன்முறைகளும் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த போக்குவரத்து ஊழியர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் இவ்விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் பேசியுள்ளார்.
காலை 11 மணியளவில் தொலைபேசியில் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் சமூக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இருவரும் இந்த போரட்டம் தொடர்பாக 10 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எதிரிகளாக நடந்துக்கொள்வது தான் தமிழக அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுவது வழக்கம். ஆளுங்கட்சி வேண்டும் என்றால், எதிர்க்கட்சி வேண்டாம் என்பார்கள், இதே போல வேண்டாம் என்றால் வேண்டும் என்பார்கள்.
இந்நிலையில் மக்கள் பிரச்சனைக்காக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவரே நேரில் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசுவது பல தசாண்டுகளுக்கு பின் நடக்கும் ஒரு சம்பவமாக கருதப்படுகிறது. இதே நாகரீகமான அரசியல் தொடர்ந்தால், தமிழகத்திற்கு விடிவு காலம் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications