ஜனாதிபதி தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சி தானாய் கவிழும்.. விரைவில் தேர்தல் வரும்.. பிரேமலதா உறுதி
ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேம லதா உறுதிபடக் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தானாய் ஆட்சி கவிழ்ந்து, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டோம். மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் தோற்றுப் போனோம்.

தோல்வி சகஜம்
ஆனால், இந்த தோல்வி என்பது மிகவும் தற்காலிகமானது. அதே போன்று தேர்தலில் தோல்வி அடைவது என்பது சகஜமானது. அடுத்து வரும் தேர்தலில் தேமுதிக வெற்றி வெற்று ஆட்சி அமைக்கும்.

முதல் இடத்தில் தேமுதிக
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக திமுகவிற்கு மாற்றாக தேமுதிகதான் இருக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அடுத்தடுத்து தேமுதிக முதல் இடத்தில் வரக்கூடிய ஒரு கட்சி .

மோடி ஆட்சி
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மோடி எந்த சாதனையையும் இந்தியாவில் நிகழ்த்தவில்லை.

சுற்றுப்பயணத்தால் பலன் என்ன?
இந்த 3 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு அதிகம் பயணித்தவர் மோடி. அதனால் இந்தியாவிற்கு என்ன பயன்? என்ன புதிய தொழில் திட்டங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன?. புதிய வேலைவாய்ப்புகள் என்ன உருவாக்கப்பட்டுள்ளன?

விரைவில் சட்டசபை தேர்தல்
முதல்வர் பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தில் சாதனை என்று எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. அதற்கு பதிலாக நாள்தோறும் தமிழகத்தில் கேலிக்கூத்துதான் நடக்கிறது. அதிமுக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டியதில்லை. அது தானாக கவிழும். ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் சட்டசபை தேர்தல் வரும் என்று பிரேமலதா கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications