இலங்கை மீனவர்கள் 14 பேர் விடுதலை: தமிழக அரசு உத்தரவு
சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 14பேரை தமிழக அரசு விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை மீனவர்கள் கடந்த மாதம் கன்னியாகுமாரி அருகே இந்திய கடல்பகுதியில் அத்தமீறி மீன் பிடித்தனர்.
இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டனர். கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து இலங்கை மீனவர்கள் 14 பேரும் புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர். காலை 10.45 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்த அனைவரும் தனி வேன் மூலம் சென்னை எழும்பூர் புத்த மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று மாலை 14 பேரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஏற்கனவே, சமீபத்தில் 11 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை 12 பேர் விடுதலை ஆனார்கள். இப்போது 14 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications