6 மாதத்தில் புதிய பாடத்திட்டம் தயார்... நிபுணர் குழு தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தகவல்
தமிழக பள்ளிகளுக்கான மாநில பாடத்திட்டம் இன்னும் 6 மாதங்களுக்குள் தயாராகும் என்று நிபுணர் குழு தலைவர் எம். ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக பள்ளிகளுக்கான, மாநில பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அவை இன்னும் 6 மாதங்களுக்குள் தயாராகும் என்று நிபுணர் குழு தலைவர் எம். ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டம் 5 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். ஆனால் தற்போது பல வருடங்கள் ஆகியும் இன்னும் மாற்றப்படாமல் உள்ளன.

இந்த நிலையில், புதிய பாடத்திட்டத்தை தரமாக மாற்றி அமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் உறுப்பினர் - செயலாளராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க. அறிவொளி மற்றும் 8 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடத்திட்ட மாற்றம் குறித்து நிபுணர் குழு தலைவர் எம். ஆனந்த கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது. பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் பல்வேறு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். இன்னும் 6 மாதங்களில் இந்த பாடத்திட்டங்கள் தயாராகும்.
பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தால் மட்டும் போதாது. அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை மாற்ற வேண்டும்.
பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் தபால் அல்லது இணையதளம் மூலமாகக் கருத்து தெரிவிக்கலாம். தமிழக மாணவர்கள் புத்திசாலிகள். அவர்கள் பாடத்திட்டத்தை மாற்றினால் அதற்கு ஏற்ப வல்லவர்களாக வருவார்கள்." என்று கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications