தமிழக முதல்வருடன் டிஜிபி, அமைச்சர்கள் அவசர ஆலோசனை.. முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்?
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக போலீஸ் செய்த வெறியாட்டத்தை அடுத்து, தற்போது தமிழக முதல்வர் பழனிசாமியுடன் காவல்துறை டிஜிபி, அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக போலீஸ் செய்த வெறியாட்டத்தை அடுத்து, தற்போது தமிழக முதல்வர் பழனிசாமியுடன் காவல்துறை டிஜிபி, அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று பார்க்காமல் போலீஸ் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த மோசமான அரசு படுகொலை காரணமாக தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக போலீஸ் செய்த வெறியாட்டத்தை அடுத்து, தற்போது தமிழக முதல்வர் பழனிசாமியுடன் காவல்துறை டிஜிபி, அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த துப்பாக்கி சூடு குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க போராட்ட களமாக மாறியுள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications