தமிழக மீனவர் பிரச்சினைத் தீர மத்தியில் வலுவான ஆட்சி அமைய வேண்டும்: ஜெயலலிதா
சென்னை: தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க மத்தியில் வலுவான அரசு அமைய வேண்டும் என முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது நேற்றைய பிரச்சாரத்தில் வலியுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலையொட்டி, நேற்று முந்தினம் காஞ்சியில் தனது பிரச்சாரத்தைத் துவக்கினார் முதல்வர் ஜெயலலிதா. பிரசாரத்தின் 2-ம் நாளான நேற்று, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் கே.என். ராமச்சந்திரனை ஆதரித்து, மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கூட்டணி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் கடுமையான துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர். துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தலாக வரும் தேர்தல் அமையும்.
கடந்த 33 மாதங்களாக தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக, மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க மத்தியில் வலுவான அரசு அமைய வேண்டும்.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசை போன்ற மோசமான அரசை இதுவரை பார்த்ததில்லை. இந்த அரசில் பங்கு கொண்ட திமுக 2ஜி ஊழல் மூலம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications