சத்துணவு தருவது தொடர்பாக மோதல்... தலைமை ஆசிரியர் மாற்றம்.. மாணவ, மாணவிகள் போராட்டம்
தென்காசி: தென்காசி அருகே சத்துணவு வழங்குவது தொடர்பாக சத்துணவு பணியாளருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து பெற்றோர்களும், மாணவ, மாணவியரும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரம் அருகேயுள்ளது கருமடையூர் கிராமம். இங்கு கீழப்பாவூர் ஒன்றிய துவக்கப் பள்ளி ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக சுப்பையா என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அங்குள்ள சத்துணவு பணியாளருக்கும் குழந்தைகளுக்கு நல்ல உணவு வழங்குவதில் பிரச்சனை எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர் சுப்பையா மத்தாளம் பாறை என்ற ஊருக்கு மாறுதல் வாங்கிச் சென்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இன்று ஏராளமானவர்கள் தங்களது குழந்தைகளோடு திரண்டு பள்ளி முன்பு வந்து மீண்டும் அந்த தலைமை ஆசிரியரையே நியமிக்க வேண்டும். அதுவரை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்றுக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பாவூர்சத்திரம் காவல்நிலைய துணை ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குழந்தைகளும் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications