ஜிஎஸ்டி அமல் எதிரொலி.. தமிழக - கேரள எல்லையில் வணிக வரி சோதனை சாவடி மூடல்
நெல்லை: ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளதால் புளியரையில் தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள வணிகவரி சோதனை சாவடி மூடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பின்படி, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநில எல்லைகளிலும், வணிகவரித்துறை சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டு, சரக்குப் பொருட்களை பரிசோதித்து, அதற்கான வரி வசூலிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழக, கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்வேறு சரக்குக்களை ஏற்றி செல்லும் லாரிகளில் சோதனைகளை நடத்த புளியரையில் தமிழக அரசின் வணிகவரி சோதனை சாவடி அமைக்கபட்டு இருந்தது.
இந்த சோதனை சாவடியை அடுத்து கேரள மாநில வணிகவரி சோதனை சாவடி அமைந்துள்ளது. இரு மாநில எல்லைகளில் இரண்டு சோதனைச் சாவடிகள் இயங்கி வந்தன. இந்நிலையில் இன்று மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளதால் புளியறையில் அமைந்துள்ள தமிழக அரசின் வணிக வரித்துறை சோதனை சாவடியை இங்கு பணியில் இருந்த அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நேற்று இரவு மூடினர்.
அதேபோல் கன்னியாகுமரி வணிக வரி சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் அமரவிலையில் உள்ள வணிக வரி சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications