கருணாநிதிக்கு விசுவாசமாக இருந்து மோசம் போனேன்- டி. ராஜேந்தர்
சென்னை: பெற்ற பிள்ளைக்காக திமுக தலைவர் கருணாநிதி யாரை வேண்டுமானாலும் இழப்பார் என லட்சிய திமுக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு விசுவாசம் காட்டிய நான் மோசம் போய்விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
லட்சிய திமுக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தரின் பிறந்தநாள் இன்று. ஆனால், தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தராமல் உச்ச நீதிமன்றம் வரை உரிமைக்குரல் எழுப்பிய உன்னத பெண்மணியாக செயல்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், பிறந்தநாள் கொண்டாட மனமில்லை என டி.ராஜேந்தர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா முயற்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்போராடி உச்ச நீதிமன்றம் வரை உன்னத குரலை உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் தான் காவிரியில் கொஞ்சமாவது வந்து கொண்டிருக்கிறது தண்ணீர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

டி.ராஜேந்தர்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரினார். காவிரி நீர் குடித்து வளர்ந்தது காரணமாகவே தான் இவ்வாறு தமிழை அடுக்கு மொழியில் பேசிவதாக குறிப்பிட்டார். காவிரி நதிநீருக்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார் என்று கூறிய டி.ராஜேந்தர், அவர் இன்று உடல்நிலை பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

கருணாநிதிக்கு கண்டனம்
தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் தன் பெற்ற பிள்ளைக்காக யாரை வேண்டுமானாலும் இழப்பார். அதனால், தான அந்த காலத்தில் எம்ஜிஆரை திமுகவில் இருந்து தூக்கி எறிந்தார். எம்ஜிஆருக்கு முன்னால் நான் எல்லாம் எம்மாத்திரம் என்று குற்றம் சாட்டினார்.

மோசம் போனேன்
கடந்த தேர்தலில் போது கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், ஒரு முறை முதல்வராக வேண்டும் என கலைஞர் கலங்கிப் பேசியதால், மாற்று அணியில் கூட சேராமல் ஒதுங்கி இருந்தேன். விசுவாசம் காட்டிய நான் மோசம் போய்விட்டேன் என்று கடுமையாக சாடினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications