47 நாட்களாக நடந்து வந்த சினிமா ஸ்டிரைக் வாபஸ்... விரைவில் படப்பிடிப்புகள் துவங்குகிறது
டிஜிட்டல் கட்டணம் உள்ளிட்டவற்றை எதிர்த்து 47 நாட்களாக நடந்து வந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வாபஸானது.
Recommended Video

சென்னை: டிஜிட்டல் சேவை கட்டணத்தை எதிர்த்து, தமிழ் திரையுலகத்தினர் கடந்த, 47 நாட்களாக நடத்தி வந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. இன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டு, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தப் போராட்டத்தில் தமிழ் திரையுலகம் இணைந்தது. அதனால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. திரைப்படம் தொடர்பான டப்பிங், எடிட்டிங் என எந்த பணியும் நடக்காமல் இருந்தது.

இதற்கிடையில், கேளிக்கை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் தமிழில் புதுப்படங்கள் வெளியாகாததால், தியேட்டர்களில் பிறமொழி படங்களும், பழைய தமிழ் படங்களுமே வெளியிடப்பட்டன.
இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, டிஜிட்டல் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில், ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து புதிய படங்களை வெளியிடுவது குறித்தும், படப்பிடிப்பு துவங்குவது குறித்தும் அடுத்த சில நாட்களில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
அந்த படத்தில் பிகினியில் நடித்ததால் நடந்த சம்பவம்! பல வருடங்களுக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த பிரியா மணி -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications