பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடும் தேதி, நேரம் இதுதாங்க.. மதிப்பெண் பட்டியல் எஸ்எம்எஸ் இல் வந்திடும்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவினை வரும் 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வினை எழுதினார்கள். இவர்களின் வினாத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதையடுத்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவினை ஏப்ரல் 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப் போவதாக பள்ளி கல்வித்துறை தேர்வுக்கு முன்பே அறிவித்து இருந்தது. இப்போது இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுத்துறை மும்முரமாக செய்து வருகிறது.
கடந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில்,குறு செய்தி மூலம் மடடுமே வெளியிடப்படுகிறது. அதன்படியே இநத ஆண்டும், தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதன்படி ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு தமிழகத்தில் வெளியாவது உறுதியாகி உள்ளது. மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnesults.nic.in, www.dge.tn.nic.in, dge.tn.gov.in இணையதளத்திலும் காணலாம்.பள்ளிகளுக்கும் ஆன்லைன் வழியாக மாணவர்களின் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications