டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முற்றுகை... வேல்முருகன் தலைமையில் போராட்டம்!
தமிழ்நாடு அரசுப் பணியில் வெளிமாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை : அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவரை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் டிஎன்பிஎஸ்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசுப் பணியில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவரைச் சேர்க்கக் கூடாது, 100 விழுக்காடு தமிழ்நாடு அரசுப் பணிகளையும் மண்ணின் மக்களுக்கே வழங்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில் "தமிழ் வழியில் பயின்றவர்க்கு" முன்னுரிமை கொடுக்க வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு சார்ந்த பணிகளில் 90 விழுக்காட்டினை தமிழகத்தவர்க்கே ஒதுக்கிட வேண்டும் உள்ளிட்ட மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தனி சட்டம் இயற்றுமாறும் வேல்முருகன் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சியின் புதிய விதியைக் கண்டித்தும் அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் டிசம்பர் 12ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகள், குளறுபடிகளுக்கு முடிவுகட்டுமாறும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசுப் பணிகளிலேயே வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவரை நியமிக்க ஏதுவாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணய விதிகளையே திருத்தியமைத்திருக்கிறது தமிழக அரசு. இது மண்ணின் மக்களுக்கு வேலை இல்லாமல் செய்து அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மனித உரிமை மீறல் நடவடிக்கை என்று போராட்டத்தின் போது பேசிய வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து வேல்முருகன் உள்ளிட்டோர் மாலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications