தாறுமாறாக உயர்ந்த "கிக்" விற்பனை.. விசாரணைக்கு உத்தரவிட்ட லக்கானி!
சென்னை: தமிழகத்தில் மது விற்பனை அளவுக்கு அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக 37 சதவீத அளவுக்கு மது விற்பனை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டுள்ளது. அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்குத் தர மது வகைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனவா என்பதை தேர்தல் பார்வையாளர்கள் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக லக்கானி கூறியுள்ளார்.
தற்போது கோடை காலம் என்பதோடு தேர்தல் காலமும் சேர்ந்துள்ளதால் மது விற்பனை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்கி விற்பனை சரிவு
வெயில் காலம் என்பதால் விஸ்கி விற்பனை சரிந்துள்ளதாம். விஸ்கி விற்பனையில் பெரிய அளவில் உயர்வு இல்லை என்று டாஸ்மாக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

ஜில் ஜில் பீர் விற்பனை உயர்வு
அதேசமயம், பீர் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிராந்தி, ரம் ஆகியவற்றின் விற்பனையும் 15 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாம்.

வருவாயும் அதிகம்
அதேபோல வருவாயும் அதிகரித்துள்ளதாம். கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில் இருந்ததை விட இப்போது அதிக அளவிலான விற்பனையும், வருவாயும் காணப்படுகிறதாம்.

மே 14 கூட்டம் அலை மோதும்
மே 14ம் தேதி மாலை 5 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 19ம் தேதி வரை மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே மே 14ம் தேதி பகல் முழுவதும் விற்பனை பயங்கரமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நகரத்தில் அதிகம்
பிராந்தி விற்பனையானது கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளதாம். அதாவது 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். பீர் வகைகளில் கிங்பிஷர் மற்றும் பிரிட்டிஷ் எம்பயர் வகைகளுக்கு செம கிராக்கி உள்ளதாம்.

37 சதவீதம் அதிகரிப்பு
இப்படியாக தமிழகம் முழுவதும் விற்பனை பரவலாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வானது 37 சததவீதமாக உள்ளதுதான் தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்தே விசாரணைக்கு லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

மது கடத்தல் அதிகரிப்பு
இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து பெருமளவில் மது கடத்தி தமிழகத்திற்குள் கொண்டு வரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்தக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையிலும் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications