5வது நாளாக நீடிக்கும் பஸ் ஸ்டிரைக்... பணிச்சுமையால் திணறும் தற்காலிக ஊழியர்கள்!
அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தொடர்வதால் தற்காலிக பணியாளர்கள் வேலை சுமையால் அவஸ்தை பட்டு வருகின்றனர்.
Recommended Video

திருநெல்வேலி: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் 5வது நாளாக நீடிப்பதால் தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடந்துராக பணியமர்த்தப்பட்டவர்கள், பணிச்சுமையால் மிகுந்த சிரமத்திற்று ஆளாகியுள்ளனர். பயணிகளின் நெரிசல், பராமரிப்பின்றி இருக்கும் வாகனங்களே அவர்களின் பணிச்சுமைக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இழுபறியில் இருந்து வருகிறது.

போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதியம் ரூ.19500 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.7 ஆயிரம் கோடியை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து முடங்கியதால் பயணிகளின் நலன் கருதி தற்காலிக பணியாளர்களை வைத்து பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதில் பல பேருந்துகள் சரியாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அந்த பஸ்களை இயக்க தற்காலிக பணியாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களையும் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதில் கட்டணங்களை கூடுதலாக வசூல் செய்வதால் பயணிகளிடம் வாங்கி கட்டி கொண்டு வருகின்றனர்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிரைவர் பயிற்சி முடித்த பல லட்சம் பேர் காத்திருக்கும் போது அவர்களை ஏன் இதில் பயன்படுத்த கூடாது. ஏற்கனவே போதுமான சம்பளம் வழங்கப்படும் போது கூடுதல் சம்பளம் கொடுத்தால் இப்படிதான் நஷ்டப்பட வேண்டும். இனியாவது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நீண்ட காலம் காத்திருப்போருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications