விராலிமலை ஜல்லிக்கட்டு விழாவில் வன்முறை.. 52 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் குவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், அங்கு கலவரம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அனுமதியும் போலீசாரிம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்று திடிரென்று ஜல்லிக்கட்டு நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர். ஆனாலும் போலீசார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கவில்லை.
இதனால் நேற்று மாலை முதல் இரவு 9 மணி வரை பல இடங்களில் சாலை மறியல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன். இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் கல் வீசியதில் 5 போலீசாரின் வாகன கண்ணாடி உடைந்து, போலீசார் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மேலும் பதட்டம் நிலவுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications